Skip links

தமிழ் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

 

 

ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 24.05.2023 ( புதன்கிழமை ) அன்று தமிழ்த்துறை சார்பாகத் “தமிழ் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா” சிறப்பாகக் கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி. சண்முகராஜு அவர்கள் தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மௌ. அஸ்கர் அலி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராகப் புதுவைப் பல்கலைக் கழகத்தின் சுப்பிரமணிய பாரதியார் தமிழ் மொழி மற்றும் இலக்கியப்புலத்தின், இணைப் பேராசிரியர் முனைவர் கே. பழனிவேலு அவர்கள், கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் “போதிமரம்”, “உள்ளத்து ஊற்றுக்கள் “, “மொட்டுக்களின் வாசம்” ஆகிய மூன்று கவிதை நூல்கள் சிறப்பு விருந்தினரால் வெளியிடப்பட்டு, அதனைக் கல்லூரி முதல்வர் பெற்றுக்கொண்டார். மேலும், இந்நூல்களை முன்னாள் மாணவர்கள் செல்வி. பா.விக்னஸ்ரீ, திரு.த. மயிலன், திரு. டி.முரசொலிராஜன் ஆகியோர் மதிப்புரை செய்து பெருமை சேர்த்தனர். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் சு . உமாமகேஸ்வரி, முனைவர் ஆ. இராசாராமன் மற்றும் முனைவர் கா. சிலம்பரசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியாக நன்றியுரையை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.இராசாராமன் வழங்கினார்.

Leave a comment